கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான மலையாள திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ் இந்தத் திரைப்படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஒவ்வொரு நாளும் மாபெரும் வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் அமைந்துள்ள கதாபாத்திரம் மற்றும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த 12 நாட்களில் மட்டும் ரூ. 100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்த திரை நட்சத்திரங்கள் இயக்குனர் சிதம்பரத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் கமலஹாசன், விக்ரம், தனுஷ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் தனுஷின் 54 – வது திரைப்படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சிதம்பரம் சமீபத்தில் சந்தித்ததாகவும் தனுஷின் 54 – வது படத்தை பற்றிய புதிய தகவல் விரைவில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நடிகர் தனுஷ் தற்பொழுது அவர் இயக்கி வரும் ராயன் படத்தில் மிகவும் பிசியாக இருப்பதாகவும் நட்சத்திர வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.