Home » Blog » நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா: ஆகாஷ் முரளிக்கு சிவகார்த்திகேயன் advised…!

நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா: ஆகாஷ் முரளிக்கு சிவகார்த்திகேயன் advised…!

by Pramila
0 comment

நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிவகார்த்திகேயன், ஆகாஷுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கினார்.

அவர் கூறியதாவது, “எல்லோருக்கும் மாமனார் என்பது சிறப்பான உறவு. ஆகாஷுக்கு நல்ல படங்களில் நடிக்க ஆசை உள்ளது; அதற்குத் தேவையான ஆதரவு வழங்கும் மாமனார் கிடைத்துள்ளார். முழு உழைப்பையும் செலுத்துங்கள்; தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பாவுக்கு அளித்த இடத்தை உங்களுக்கும் வழங்குவார்கள். முதல் படமே பொங்கல் வெளியீடாக இருப்பதால், முதல் முயற்சியிலேயே சிறந்த வெற்றி பெறுங்கள்” என்றார்.

இந்த நிகழ்வில் இயக்குநர் விஷ்ணுவர்தன், கலைப்புலி தாணு, சரத்குமார், விஜய் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, அதர்வா முரளி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

‘நேசிப்பாயா’ திரைப்படம் ஜனவரி 14, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.