தமிழ் மொழி என்பது ஒரு மொழி மட்டும் அல்ல; அது தமிழரின் ஆன்மா. பழமையானது, பண்பாட்டின் பசுமை கொண்டது, உலகில் பலரால் பேசப்படும் அழகிய மொழிகளில் முக்கியமானது. இப்படிப்பட்ட தமிழுக்கு உலகளவில் மேலும் மரியாதை ஏற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த நோக்கத்துடன் தமிழ், இந்தி ,ஆங்கிலம் எனப் பல மொழிகளில் திரைபடங்களுக்கு இசை அமைத்து இசைபுயல் ஆக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஆஸ்கார் நாயகன் என புழகப்படும் ஏ.ஆர். ரகுமான் தமிழ் மொழிக்கான நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் என்றாலே இசையின் இளவரசர். உலகளவில் பல விருதுகள் பெற்ற இவர், இந்திய சினிமாவிலும், சர்வதேச இசைத்துறையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர். ஆனால், தமிழுக்காக அவர் எடுத்திருக்கும் இந்த முயற்சி, அவரது உள்ளத்தில் தமிழின் மீது உள்ள நெஞ்சார்ந்த பற்று செயல் வடிவில் பேசப்படும் .
இந்த நினைவுச் சின்னம் மூலம், தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு காட்டும் வழி உருவாகும். இது மூலமாக, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் எதிர்காலக் தலைமுறைகள் தமிழைப் பற்றி மேலும் அறிந்து, அதன் மீது பெருமை கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
இந்த நினைவுச் சின்னம் வெறும் ஒரு சிற்பம் அல்லது கல்லறை அல்ல. இது தமிழர் பெருமையின் வெளிப்பாடு. இது, “தமிழ் வாழ்க” என்கிற கோசத்தின் கண்ணோட்டம்.
இது போல ஒரு திட்டத்தை ஒரு இசைக் கலைஞன் முன்வைத்திருப்பது பெருமையான விஷயம். இது நம்மை யோசிக்க வைக்கிறது – நாம் ஒவ்வொருவரும் நம் மொழிக்காக என்ன செய்துள்ளோம் என்று.
தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் ஏ.ஆர். ரகுமானின் முயற்சி, ஒரு கலைஞனின் கலையைத் தாண்டி, அவரது சமூகப் பொறுப்புணர்வையும் காட்டுகிறது. நாமும் இதில் பங்களிக்க, தமிழைப் பேசி, பரப்பி, பாதுகாக்க உறுதியேற்போம். ஏனெனில் தமிழ் எங்கள் அடையாளம்; அதற்கான நினைவுச் சின்னம் எங்கள் தலைமுறைகளுக்கு ஒரு கலசப் பெருமை.