கேரளா மாநிலத்தில் கோழிகோடு மாவட்டத்தில் கடந்த வாரம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர் . அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது . இவர்கள் நிபா வைரஸால் இறந்து இருக்கலாம் என்று சந்தேகத்தின் கீழ் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . இவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக பூனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நிபா வைரஸ் பரவக்கூடும் என்றும் இதற்கான முடிவுகள் இன்று மாலை வரும் . அதன் பின்னரே இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவரும்.