Home » Blog » பொங்கல் பரிசுத்தொகுப்பு என்னவென்று தெரியுமா? தமிழக அரசு ஆணை.

பொங்கல் பரிசுத்தொகுப்பு என்னவென்று தெரியுமா? தமிழக அரசு ஆணை.

by Pramila
0 comment

பொங்கல் என்பது தமிழர்கள் மற்றும் தென்னிந்திய மக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். இது பெரும்பாலும் தமிழ் புத்தாண்டின் தொடக்கம், வேளாண்மையின் திருவிழா மற்றும் இயற்கை மரியாதையின் அங்கமாகக் கொண்டாடப்படுகிறது. பண்டிகை பொதுவாக ஜனவரி மாதத்தில், சூரியன் மகர ராசிக்கு வந்தபோது கொண்டாடப்படுகிறது

“பொங்கல்” என்பது “கொண்டாடுதல்” அல்லது “வளர்ச்சி” என்ற பொருளைக் கொண்ட தமிழ்ச் சொல் ஆகும். இந்த பண்டிகை குறிப்பாக வேளாண்மைத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகையை தமிழர்கள் உழவாளர்கள் மற்றும் இயற்கைச்சுழற்சியின் பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். எனவே, பொங்கல் பண்டிகை உழவுகளுக்குப் பெரும் பாராட்டாகவும் கருதப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசானது பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பரிசுத்தொகுப்பை கொடுக்கின்றது, அதுபோல இந்த வருடமும் 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பிக்க தமிழக அரசு பரிசு தொகுப்பை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்த பொங்கல் தொகுப்பானது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அது மட்டுமல்லாது இலங்கை தமிழர்  மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவை வழங்கிட அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இலவச வேட்டி,சேலை

பொங்கல் திருநாளை முன்னிட்டு கொடுக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும், பொங்கல் சிறப்பு பரிசுதொகுப்புடன் இணைத்து வேட்டியும் ,சேலையும் மக்களுக்கு வழங்கப்படும் .இதனால் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயனடைவார்கள்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.