Home » Blog » அவுட்டாகாத இஷான் கிஷன்; அவுட் கொடுத்த அம்பயர்- ஐபிஎல்-லில் வெடித்த சர்ச்சை!

அவுட்டாகாத இஷான் கிஷன்; அவுட் கொடுத்த அம்பயர்- ஐபிஎல்-லில் வெடித்த சர்ச்சை!

by Pramila
0 comment

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், அவுட்டாகாத போதும் தான் கேட்ச் கொடுத்துவிட்டதாக நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது யாருமே அவுட் என அப்பீல் கேட்காத நிலையில் அம்பயர் அந்த பந்துக்கு அவுட் என அறிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டிங்கில் சொதப்பிய SRH

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை-ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று(ஏப்.23) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர். 13 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணியை மீட்கும் போராட்டத்தில் க்ளாசன் ஈடுபட்டார். தனியொரு ஆளாக களத்தில் நின்ற கிளாசன், 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கி 71 ரன்கள் அடித்து வெளியேறினார். எனினும் 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்களை மட்டுமே ஹைதராபாத் அணி அடித்தது. மும்பை அணி 15.4 ஓவர்களிலேயே 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

வெளியேறிய இஷான் கிஷான், அது அவுட்டே இல்லையாம்

இந்த போட்டியில் ஹைதராபாத் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அவுட் ஆகாமலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். லெக் சைடு wide ஆக போன பந்தை அடிக்க நினைக்க, அது நேராக கீப்பர் கைக்குச் சென்றது. உடனே களத்தில் இருந்து இஷான் கிஷன் வெளியேறினார். மும்பை வீரர்களும் அவுட் என முறையிடவில்லை. இஷான் கிஷன் வெளியேறிய பிறகே அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால், ரீப்ளேயில் பந்து பேட்டில் டச்சாகாமல் சென்றது தெரியவந்தது.

இஷான் கிஷன் மீது எழும் குற்றச்சாட்டு

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டானதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் #FIXING ட்ரெண்டாகி வருகிறது. அவுட் ஆகாமலே எந்தவித சந்தேகத்தையும், ரிவிவ்யூவையும் கேட்காமலும், அம்பயர் அவுட் கொடுக்காத நிலையிலும் அவர் வெளியேறியதால், நெட்டிசன்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இஷான் கிஷன் மும்பை அணியிடம் பணம் வாங்கிவிட்டாரோ என்றெல்லாம் கூட விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, நடப்பு ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில், பிசிசிஐ இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் எடுத்ததையும் விமர்சித்து வருகின்றனர்.

ஐசிசி விதி சொல்வது என்ன?

ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனாலும், அது அம்பயருக்குத் தெரிந்தாலும் ஃபீல்டிங் செய்யும் அணியைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வீரர் அவுட் என அப்பீல் செய்தால் மட்டுமே, அம்பயரால் அவுட் என அறிவிக்க முடியும். மேலும், ஒரு பேட்ஸ்மேன் தவறாக அவுட் என நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினால், அம்பயர் அவரைத் தடுத்து நிறுத்தி மீண்டும் விளையாட அழைக்க முடியும். இது ஐசிசி விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மோசமான ரெக்கார்ட் படைத்த SRH

இந்த போட்டியில் தோற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் SRH அணி மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH ஆகும். இந்த பட்டியலில், டெல்லி மற்றும் பஞ்சாப் தலா 137 முறையும், ஆர்சிபி (132), கேகேஆர் (125), ராஜஸ்தான் (113), மற்றும் சிஎஸ்கே (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.

குஷியில் மும்பை ரசிகர்கள்

மும்பை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஆர்சிபியை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் 3-ல் வென்றால், மும்பை அணி எளிதாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் கடப்பாரை இஸ் பேக் என மும்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.