நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, இவரது உறவினரான சசிகலா என்பவரிடம் தனக்கு சொந்தமான 5 பவுன் தங்க நகையை சசிகலாவிடம் வழங்கியுள்ளார்.
அதை பெற்றுக்கொண்ட சசிகலா பையில் எடுத்துச் சென்றதாகவும், அப்போது வழியில் தவறவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சசிகலா,சங்கீதா ஆகிய இருவரும் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் சுகவனம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தூய்மை பணியாளர் ராதாமணி என்பவர் சாலையில் பை உடன் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் மீட்கப்பட்ட தங்க நகையை ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் தவறவிட்ட சசிகலா, சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளருக்கு கௌரவித்து ஊக்கத்தொகை வழங்கியும்,மேலும் காவலர் சந்திரசேகருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.