சென்னையில் நேற்று அரும்பாக்கத்தில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை பசுமாடு தாக்கியுள்ளது இந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனியில் பள்ளி முடித்துவிட்டு தனது தாயுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக பசு மாடு ஒன்று வந்துள்ளது. அந்த மாடு திடீரென நடந்து சென்று கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை கொம்பால் முட்டி தூக்கி வீசி உள்ளது. பிறகு சிறுமி கீழே விழுந்தவுடன் மீண்டும் அந்தப் பசு மாடு தனது கொம்பால் மீண்டும் மீண்டும் சிறுமையை தாக்கியுள்ளது.
தாய் மற்றும் மகளின் கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மாட்டை விரட்ட முயன்றனர். ஆனால் எதற்கும் அசராத அந்த மாடு மீண்டும் மீண்டும் குழந்தையை தாக்கிக் கொண்டிருந்தது சிறுமியின் தாய் கற்களை வீசி விரட்ட முயன்றார். பசு மாடு சிறுமியை கடுமையாக தாக்கியது பின்பு பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் தந்தை வேதனையில் இதைப் போன்று வேறு எந்த ஒரு குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து மாட்டின் உரிமையாளர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிப்பது கவனக்குறைவாக இருப்பது உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் மாட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெருக்கலை நம்பி மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்றும் அப்படி தெருவில் சுற்றி திரியும் அனைத்து மாடுகளையும் பிடிக்குமாறு உத்தரவுவிட்டுள்ளார்.