Home » Blog » சாந்தன் உடலை இலங்கை  கொண்டு செல்ல நடவடிக்கை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாந்தன் உடலை இலங்கை  கொண்டு செல்ல நடவடிக்கை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Pramila
0 comment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  உச்ச நீதிமன்றம்    அறிவுறுத்தலை தொடர்ந்து இலங்கை தமிழரான சாந்தன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.  விடுதலை செய்யப்பட்ட பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில்  சாந்தன் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான இன்னும் சில கைதிகள் விடுதலை செய்த பிறகும் இந்த சிறப்பு முகாமில்  வைக்கப்பட்டிருந்தனர். திடீரென்று  ஜனவரி 24ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டார்.  உயர் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்தனுக்கு தீவிர சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டு வந்தனர் பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் செயல் இழப்பு மற்றும் உடலில் இதர நோய் தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த சாந்தன் திடீரென்று நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.  விடுதலை செய்து திருச்சி முகாமில் இருந்த சாந்தனை பார்ப்பதற்காக இலங்கையில் அவர் தாயார் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு  மத்திய அரசுக்கு  வேண்டுகோள் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சாந்தனின் தாயார் பலமுறை வேண்டுகோள் வைத்த நிலையில் மத்திய அரசு சாந்தன் இலங்கை செல்ல அனுமதி வழங்கி இருந்த போதிலும் இலங்கை செல்வதற்கு முன்னதாகவே சாந்தன் உயிரிழந்து உள்ளது அவர் குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

சாந்தன் விடுதலை அடைந்த பிறகு திருச்சி முகாமில் உயிருடன் இருந்தபோது பலமுறை அரசுக்கு இலங்கை செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள தாயாரை காண வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  சில மாதங்களாகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு சாந்தனை இலங்கை செல்வதற்கு அனுமதி  அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதை தொடர்ந்து தற்பொழுது மத்திய அரசு சாந்தனை இலங்கை செல்ல அனுமதித்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென்று சாந்தன்  உயிரிழந்து உள்ளார். 

இன்று சாந்தன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு ஜனவரி 22 ஆம் தேதியே சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அனுமதி அளித்த நிலையில் ஏன் இன்றுவரை சாந்தனை  இலங்கைக்கு அனுப்பி வைக்கவில்லை என்று தமிழக அரசிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு உடல்நிலை பாதிப்பு காரணமாகவே சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியவில்லை என்று பதில் அளித்துள்ளது. 

இதை தொடர்ந்து தற்பொழுது சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.