அதிமுக யாருக்கு சொந்தம் என்று பெரும் போராட்டமே நடந்த நிலையில் சட்டரீதியாக அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்றது இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளரானார். மேலும் இரட்டை இலை சின்னமும் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற்ற பொழுது அதிமுக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது. மேலும் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறி வரைய இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி புதிய கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தற்பொழுது வழக்கு தொடர்ந்து உள்ளார் அந்த வழக்கை 2017 ஆம் ஆண்டு சசிகலா அதிமுகவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னரே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி தற்பொழுது வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருக்கும் நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்க கூடாது என்றும் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வந்துவிடுமோ என்று கலக்கத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.