சென்னையில் நாளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் 47 – வது புத்தகக் கண்காட்சி நாளை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த கண்காட்சி நாளை முதல் வருகின்ற 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாபெரும் 47 – வது புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்தகக் கண்காட்சியானது வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 1000 – க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறும் என்ற தகவலும் தற்பொழுது கிடைத்துள்ளது.