இலவச பேருந்து பயணம் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் வரும் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிக்கை விடுத்துள்ளது.
சென்னையைச் சார் நான் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன் வழங்குதல் குறித்த அறிக்கையை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
சென்னை சார்ந்த மூத்த குடிமக்கள் ஜனவரி 2025 முதல் ஜூன் 2025 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு பத்து டோக்கன் கல்வி தான் ஆறு மாதத்திற்கான கட்டணம் இல்லாத பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுதல் பழைய அடையாள அட்டையை புதுப்பித்தல் புதிய அடையாள அட்டை வழங்குதல் அனைத்தும் இணைப்பில் இருக்கக் கூடிய 42 மையங்களில் வருகிற 21 டிசம்பர் 2024 முதல் 31 ஜனவரி 2025 வரை விடுமுறை இல்லாமல் அனைத்து நாட்களிலும் காலை 8:00 மணி முதல் இரவு 7:30 வரை வழங்குவார்கள்.
இதுவரை இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளாத மூத்த குடிமக்கள் புதிதாக கட்டணமில்லா பயணடோக்கன் மற்றும் அடையாள அட்டைகளை பெற இருப்பிடச் சான்று (குடும்ப அட்டை ,ஆதார் அட்டை ,ஓட்டுனர் உரிமம், கல்விச் சான்று )இதில் ஏதேனும் ஒன்று வாக்காளர் அடையாள அட்டை மேலும் 2 வண்ண புகைப்படங்கள் எடுத்து அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்க வேண்டும்.
இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கும் மையங்கள்
வரிசை எண் பணிமனை/பேருந்து நிலையங்கள்
- அடையாறு
- பெசென்ட் நகர்
- திருவான்மியூர்
- மந்தைவெளி
- தி நகர்
- சைதாப்பேட்டை
- சைதாப்பேட்டை பேருந்து நிலையம்
- மத்திய பணிமனை
- சென்ட்ரல் ரயில் நிலையம்
- பிராட்வே
- குரோம்பேட்டை -1
- பல்லாவரம்
- ஆலந்தூர்
- கிண்டி எஸ்டேட்
- அய்யப்பன் தாங்கல்
- வடபழனி
- கே கே நகர்
- ஆதம்பாக்கம்
- வேளச்சேரி
- அண்ணா நகர்
- கோயம்பேடு
- அம்பத்தூர் எஸ்டேட்
- அம்பத்தூர் ஓ.டி
- ஆவடி
- அயனாவரம்
- வில்லிவாக்கம்
- தண்டையார்பேட்டை -1
- சுங்கச்சாவடி
- எண்ணூர்
- வியாசர்பாடி
- எம் கே பி நகர்
- மாதவரம்
- பாடியநல்லூர்
- செங்குன்றம்
- தாம்பரம்
- மெப்ஸ் பேருந்து நிலையம்
- பூந்தமல்லி பெரம்பூர் பேருந்து நிலையம்
- வள்ளலார் நகர்
- செம்மஞ்சேரி
- திருவொற்றியூர்
- கிளாம்பாக்கம்
- குன்றத்தூர்