Home » Blog » கர்நாடக எல்லையில் திருப்பி அனுப்பப்படும் தமிழக வாகனங்கள் !

கர்நாடக எல்லையில் திருப்பி அனுப்பப்படும் தமிழக வாகனங்கள் !

கர்நாடகாவில் காவேரி நீர் தீர்ப்புக்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது .

by Pramila
0 comment

கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே காவேரி  நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சனைகள் இருந்து வருகிறது . இதனிடையே காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரையில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி என்ற விதத்தில் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது  . ஆனால் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும்  தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர் திறந்துவிடுவதர்க்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது .

இதனால் பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை  உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதற்காக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . பள்ளி மட்டும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிதுள்ளனர்.  மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லைகளில் நேற்று முதல் இன்று வரையில்  கர்நாடகா செல்லக்கூடிய வாகனங்களை திருப்பி அனுப்பப்பட்டுவருகிறது  . 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.