தமிழகத்தின் வடகிழக்க பருவமழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையானது பெய்து வருகிறது.
மதுரையில் பரவலாக கடந்த ஒரு வார காலமாகவே பரவலாக மழையானது பெய்து வருகிறது. இருந்தபோதிலும் இன்று காலையிலிருந்து மதுரை புறநகர் பகுதிகளில் அதி கனமழையானது பெய்து வருகிறது. இதை தொடர்ந்து மதுரையில் ஒரு சில இடங்களில் மழைநீரானது தேங்கியுள்ளது. இன்று காலை சுமார் 15 நிமிடங்களில் 4.5 சென்டிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது.
மேலும் இன்று காலை 10 மணி நிலவரப்படி 9.8 cm மழை அளவு பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்ட வருகிறது.