திடீரென மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக வன்முறை கும்பல் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் பல இடங்களை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இதற்கு முன்னதாகவே மத்திய அரசை கண்டனம் தெரிவித்து தொலைபேசியில் இருக்கும் விளக்குகளை ஒளிர செய்து சிலர் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.