தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்பயிற்சி, தோட்டக்கலை போன்று 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ. 5000 தொகுப்பூதியமாக தீர்மானம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஊதியமாக உயர்த்தப்பட்டது. மேலும் 2017 ஆம் ஆண்டு ரூ. 700 ஊதியமாக உயர்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி இருந்தபோது ரூ. 2,300 ஊதியமாக வழங்கப்பட்டது. மேலும் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வந்தனர். பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தர பணி மற்றும் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து தற்பொழுது பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ஊதிய உயர்வு தமிழ்நாடு அரசு உயர்த்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 12,500 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு மாதத்தில் இருந்து இந்த உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கல்வித்துறை தெரிவித்துள்ளது.