தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. கடந்த வருடம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, கரும்பு என பொங்கல் பரிசை வழங்கியது.
இந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசை வழங்குவது பற்றிய ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு நிவாரண தொகையாக சுமார் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 6000 ரொக்கப்படும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ. 1,486 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தற்பொழுது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அதிக கனமழையின் தாக்கத்தினால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்பொழுது வெளியாகி இருக்கும் செய்தியில் பொங்கல் பரிசு தொகை பற்றி கூறிய விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசித்து பொங்கல் பரிசு பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும். என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.