Home » Blog » சென்னையில் சமத்துவ பொங்கல்…! வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்பு-வி.ஐ.டி பல்கலைக்கழகம்.

சென்னையில் சமத்துவ பொங்கல்…! வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்பு-வி.ஐ.டி பல்கலைக்கழகம்.

by Pramila
0 comment

சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நேற்று சர்வதேச சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், அமெரிக்காவின் ஆர்ஐடி கல்வி நிறுவனத்தின் தலைவர் பிரபு டேவிட் உள்ளிட்ட 30 வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. மேலும், பல்லாங்குழி, பரமபதம், பம்பரம் விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, ஜல்லிக்கட்டு காளை மாடு காட்சிப்படுத்தப்பட்டது. இவற்றை வெளிநாட்டு விருந்தினர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது, அப்போது அனைவரும் ‘பொங்கலோ பொங்கலோ’ என மகிழ்ச்சியுடன் கோஷங்களை எழுப்பினர். பின்னர், அறிஞர் அண்ணா தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

இந்த விழா, வெளிநாட்டு விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது மற்றும் பாரம்பரிய பொங்கல் விழாவின் சிறப்பை உலகளவில் அறிமுகப்படுத்தியது.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.