Home » Blog » அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வரையில் 250 கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்….!

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வரையில் 250 கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்….!

by Pramila
0 comment

செந்தில் பாலாஜியை கடந்த 7-ந் தேதியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தற்போது வரையில் மட்டும் சுமார் 250 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ச்சியாக அவரிடம் கேள்வி கேட்காமல் விசாரணைக்கு இடையே அவருக்கு ஓய்வும் கொடுக்கப்படுகிறது.

செந்தில் பாலாஜிக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வழங்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழுவினர் எப்போதும் அங்கு கீழ் தளத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியும் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுத்து வருகிறார் என்று கூறபடுகிறது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி தெரிவித்து வரும் பதில்கள் அனைத்தையும் தனி வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிதிருந்தநிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்…..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து வைத்து உள்ளனர்.அதில் தற்போது வரையில் 250 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.கேள்விகள் அனைத்தும் வெள்ளை பேப்பரில் ‘டைப்’ செய்யப்பட்டு அதற்கு செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமையில் இருந்துதான் கேள்விகள் கேட்க தொடங்கியுள்ளார்கள். 

அதில் அமலாக்கத்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சமீபத்தில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்குகளின் ஸ்டேட்மெண்டை வைத்தும் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.

செந்தில் பாலாஜியின் மனைவி வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றது குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரித்து உள்ளனர்.பெரும்பாலான கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ‘தெரியாது’ ‘நினைவில்லை’ ‘அது எனது பணம் இல்லை’ என்று பதில் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நேற்று அவருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சென்று கொடுத்துள்ளார்கள்.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.