சட்டவிரோதமாக பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர் அமைச்சர் செந்தில் பாலாஜி . செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் , இவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நேற்று அதிகாலை 6:00 மணி அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் , அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்கி பின் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் .
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார் . இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞரான என். ஆர். இளங்கோ முறைத்தார் . இந்த மனுவை ஏற்ற நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனோ நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.