Home » Blog » கோவையில் LPG டேங்கர் லாரி கவிழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் LPG டேங்கர் லாரி கவிழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

by Pramila
0 comment

கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் எல்பிஜி (LPG) எரிவாயு ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்தது. கேரளாவின் கொச்சியிலிருந்து கோவையில் உள்ள கணபதி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி, மேம்பாலத்தில் ஏறியபோது லாரிக்கும் டேங்கருக்கும் இடையிலான இணைப்பு துண்டானது. இதனால், டேங்கர் பிரிந்து மேம்பாலத்தில் கவிழ்ந்து, எரிவாயு கசிய தொடங்கியது.

தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து, எரிவாயு கசிவை தடுக்க தண்ணீர் பீய்ச்சியடித்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, மேம்பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சுமார் 8 மணி நேர மீட்பு பணிகளுக்குப் பிறகு, டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டு, எரிவாயு கசிவு நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார் மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.