Home » Blog » வருகின்ற 30-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

வருகின்ற 30-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

by Pramila
0 comment

தஞ்சையில் வருடம் தோறும் தியாகராஜ ஆராதனை விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.  இந்த வருடம் 177-வது  ஆராதனை விழா கொண்டாடப்பட உள்ளது.  வருகின்ற 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தியாகராஜ ஆராதனை விழா  தொடங்க உள்ளது.  26 ஆம் தேதி முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களும் அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. 

வருகின்ற 30-ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து காலை 8.30  மணியளவில் மங்கள இசை கச்சேரியும் நடைபெறுகிறது.  தியாகராஜர் பல்லாக்கில் இரவு 8 மணி அளவில் வீதி உலா காட்சி நடைபெற இருக்கிறது.  இதைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் தியாகராஜ ஆராதனை விழா நிறைவு பெறுகிறது. 

177- வது தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு வருகின்ற 30ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.