Friday, June 20, 2025
Home » Blog » தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு!

தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு!

by Pramila
0 comment

2019ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய பெரும் பாலியல் வன்கொடுமை வழக்காக பொள்ளாச்சி பாலியல் வழக்கு கருதப்படுகிறது. இந்த வழக்கில், பொள்ளாச்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுடன் நட்பு கொண்டு,பல பெண்களை சந்தித்துப் பழகி, பின்னர் அவர்களை தனியிடங்களுக்கு அழைத்து சென்று, அவர்களுடன் பாலியல் உறவு வைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்து, பின்னர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு, முதலில் பொள்ளாச்சி காவல்துறையால் விசாரிக்கப்பட்டது, பின்னர் அதன் தீவிரம் மற்றும் அரசியல் தொடர்புகளை கருத்தில் கொண்டு, சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் போது, குற்றவாளிகள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக, வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் விசாரணை நடந்தது. பிப்ரவரி 2024ல், 9 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிஐ, குற்றவாளிகளின் வீட்டில் இருந்து 30 கம்ப்யூட்டர் டிஸ்க்கள் மற்றும் குறிப்புகள் போன்ற பொருட்களை மீட்டது. இந்த பொருட்கள் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக பயன்படுத்தப்படுகின்றன 

மேலும், மட்ராஸ் உயர்நீதிமன்றம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு தமிழக அரசை கண்டித்து, ரூ. 25 லட்சம் நிவாரண தொகையை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டது .

இந்த வழக்கு, பெண்களின் பாதுகாப்பு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மற்றும் நீதிமன்றத்தின் வேகமான நடவடிக்கைகள் போன்ற பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிமன்றம், குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என்றும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும் பல முறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், இன்றே (2025 மே 13) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக நீதிமன்ற அறிவித்துள்ளதுடன், இது தொடர்பாக சமூகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியளிக்கப்படுமா? என்ற கேள்விகள் பொதுமக்கள் மனங்களில் எழுந்துள்ளன.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளை என்பது உறுதியானதையடுத்து, கோவை மகளிர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகள், கண்காணிப்பு கேமராக்கள், சட்டம்-ஒழுங்கு படையணிகள் என மிகுந்த பதற்றம் நிலவுகிறது.

தொடக்கத்தில் பொள்ளாச்சி காவல்துறையால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. முக்கிய அரசியல் தொடர்புடையவர்கள் வரை சிக்கியதாக கூறப்படும் இந்த வழக்கு, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல முக்கிய விவாதங்களை எழுப்பிய வழக்காகவே இருந்து வருகிறது.

இன்று வெளிவரும் தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஒரு திடமான செய்தியைத் தருமா என்பதையும் தீர்மானிக்கும்.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.