TNPSC தேர்வு
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு தேர்வுகளை நடத்துகிறது. TNPSC தேர்வுகள் மூலம், திறமையுள்ள மற்றும் தகுதியான நபர்கள் அரசு பணிகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
TNPSC தேர்வுகள் பல்வேறு வகைகளாக உள்ளன. இதில், Group 1 தேர்வு மூலம் உயர் பதவிகளான மாவட்ட கலெக்டர், உதவி இயக்குனர் போன்ற பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். Group 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், வருவாய் உதவியாளர் போன்ற பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வுகளின் மூலம், தமிழ்நாடு அரசுத் துறைகளில் நிலையான வேலை வாய்ப்பு பெற முடியும். அரசு வேலை என்பது மாத சம்பளம், ஓய்வூதியம், மருத்துவ நலன், வேலை உறுதி என பல சலுகைகள் கொண்டது. மேலும், சமூக அந்தஸ்தும் பாதுகாப்பான வாழ்வும் இதில் உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வை நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் கிரியப்பன் வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்வு மூலம் மொத்தம் 3,935 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மே 25, 2025-க்குள் இணையத்தின் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கு உடனடி சான்றுகள் மற்றும் தேர்வு விவரங்கள் குறித்து www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வுக்கு தயாராக உதவ இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மே 6, 2025 அன்று தொடங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் மற்றும் வேலையிலா இளைஞர்கள் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புகளின் சிறப்பம்சங்கள்
சிறந்த பயிற்றுநர்கள் மூலம் பாடங்களின் விரிவான பயிற்சி
ஸ்மார்ட் போர்டு வசதி மற்றும் இலவச வைஃபை இணைப்பு
போதிய அளவிலான நூலக வசதி – அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுடன்
திட்டமிட்ட பயிற்சி கால அட்டவணை
வார வாரமாக தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகள்
மேலும், மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, பயிற்சிக்கான இலவச பாடக்குறிப்புகளை டவுன்லோடு செய்யலாம்.
இந்த வாய்ப்பு TNPSC தேர்வை வெல்ல முயற்சிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிக முக்கியமானது. அனைவரும் இந்த பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.