Home » Blog » டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

by Pramila
0 comment

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.  மேலும் இந்த தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்ற செய்தியும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் தேர்வுக்கான அறிவுறுத்தல்களை நன்றாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம்  என உறுதி செய்து கொள்ள வேண்டும்  என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான  விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசியாக 28. 02. 2024  இரவு 11.59  மணி வரை  குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். இதை தொடர்ந்து விண்ணப்பங்கள் சரிபார்க்கும் நாள் குறிப்பிடப்பட்டுள்ளது 04.03.2024  அதிகாலை 12.01  மணி முதல் 06.03.2024 இரவு 11.59  மணி வரை கொடுக்கப்பட்டுள்ளது. 

குரூப் 4 தேர்வுக்கான நாள் 09.06.2024  அன்று  காலை 9.30  மணிக்கு தொடங்கி மதியம் 12.30  மணி வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்த குரூப்-4 தேர்வு தமிழக  வனத்துறை,  வன பாதுகாப்பாளர்,  வன கண்காணிப்பாளர் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.