Home தமிழ்நாடு ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்த தக்காளி விலை –  வேதனையில் இல்லத்தரசிகள்…!

ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்த தக்காளி விலை –  வேதனையில் இல்லத்தரசிகள்…!

by Pramila
0 comment

தக்காளி விலை சில மாதங்களாகவே பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது.  இதன் காரணமாக இல்லத்தரசிகள் சமைப்பதற்கு தக்காளி பயன்படுத்துவதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.  தக்காளி, வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்துவதில் மிகுந்த பயம் ஏற்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.  தக்காளியின் விலை 140 குறைந்த நிலையில் தற்பொழுது படிப்படியாக உயர்ந்துள்ளது. 

தக்காளியின் வரத்து குறைவான இருப்பதால் மீண்டும் தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்து ஒரே நாளில் ரூ. 30  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தமிழ்நாடு முழுவதும் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை ரூ. 160 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.  நாள்தோறும் தக்காளியின் வரத்து 1000 முதல் 1200 டன்  வரை இருந்த நிலையில் தற்பொழுது 300 டன்னாக குறைந்த காரணத்தால் தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் தக்காளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.  தக்காளி ஒரு கிலோ ரூ. 60க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தக்காளியின் விலை உயர்வை தொடர்ந்து தமிழக அரசு 300 ரேஷன் கடைகளில் தக்காளி விலை மலிவாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign