தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வரும். தஞ்சை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், மதுரை, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.