வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அதைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களை கனமழை முதல் அதி கனமழை வரை பெய்து வந்தது.
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் அதி கனமழையானது பெய்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடல் பகுதியில் இருக்கும் பொழுது சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் மழையின் அளவானது குறைய தொடங்கியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு அருகே எண்ணூரையொட்டி கரையைக் கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பொழுது தமிழகத்தில் மழை மற்றும் காற்று பாதிப்பு ஏதும் இல்லை, இதைத் தொடர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகின்ற 22 ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு அந்தமான் பகுதியில் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர இருப்பதாகவும். இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.