கடந்த ஒரு வார காலமாகவே வடக்கிழங்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இதை தொடர்ந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை உருவானது. இதைத் தொடர்ந்து காற்றின் திசையானது வடமேற்கு நோக்கி நகர தொடங்கியது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக தமிழக முழுவதும் வருகின்ற மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மாநில ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.