Home » Blog » தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – உயிருடன் எரிந்து 23 பேர் பலி!

தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – உயிருடன் எரிந்து 23 பேர் பலி!

by Pramila
0 comment

இறப்புகள் எண்ணிக்கையாக மட்டும் பார்க்கப்படும் நிலைமை காசாவில் தொடர்கிறது.நேற்றிரவு, காசாவில் நடந்தது மனதை கலங்கச் செய்யும் கொடூரம் – மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் நேரடி தாக்குதல் நடத்தியதில் 23 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர்.

அமைதிக்கான கூடாரம் – இறப்புக்கான கனவாக மாறியது

வீடுகளை இழந்துவிட்டு பாதுகாப்பு தேடி வந்த மக்கள், கோர பரிசாகக் குண்டுகளை பெற்றனர். பல குடும்பங்கள் ஒரே கூடாரத்தில் தங்கியிருந்த நிலையில், இரவு நேரத்தில் நடத்திய தாக்குதலில், கூடாரங்கள் தீப்பற்றிக் கொழுந்துவிட்டது .

“என் குழந்தையை கையில் கொண்டே ஓடினேன்… ஆனால் நிமிடத்திற்குள் தீயில் விழுந்தாள். எதையும் செய்ய முடியவில்லை…” என சோகத்தில் உருகும் தந்தை ஒருவரின் குரல், அந்த நிலையின் கொடூரத்தைக் கூறியது.

மரணங்கள் மட்டுமல்ல – மனிதநேயத்தின் வீழ்ச்சி

தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
மருந்து இல்லை, முறையான சிகிச்சை இல்லை .

சர்வதேச அமைப்புகள் கண்டனம் 

ஐக்கிய நாடுகள் மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இத்தாக்குதலை மனிதாபிமான விதிகளை மீறும் செயல் எனக் கடுமையாக கண்டித்துள்ளன.
அதுபோலவே, உலக மக்கள் இணையத்தில் #GazaUnderAttack என்ற ஹாஷ்டேக் மூலம் தங்களது கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இஸ்ரேலின் விளக்கம் 

இஸ்ரேல் தரப்பினர், “பயங்கரவாதிகள் பொதுமக்கள் இடையே ஒளிந்திருக்கிறார்கள்” என்ற பழைய காரணத்தை மீண்டும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், தரையில் கருகிய குழந்தைகள் உடல்களுக்கு அது எந்த நீதி?

காசாவில் வானில் எழும் புகை, போரின் வெற்றிக்கொடியை அல்ல, மனிதன் மனிதனாக இல்லாத நிலையில் சென்றுவிட்டதை கூறும் அடையாளமாக மட்டுமே உள்ளது.

 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.