Home » Blog » கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…!

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…!

சென்னையில் உள்ள கவர்னர்  மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

by Pramila
0 comment

நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசினார் .  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ,  பெட்ரோல் குண்டு வீசிய நபரை  போலீசார் மடக்கி பிடித்தனர் . அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தேனாம்பேட்டை சேர்ந்த கறுக்கா வினோத் என்றும் ,  அவர் இதற்கு முன்பு சிறையில் இருந்ததாகவும் அப்போது வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால்  கோபத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார் .

வினோத்தை கைது செய்த போலீசார்  வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இதைப் பற்றி எப்.ஐ.ஆர் பதிவில் பெட்ரோல் குண்டு அதிக  சத்தத்துடன் வெடித்தது , அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல் ,  அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்  போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்  .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.