Home » Blog » கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – தமிழக அரசு

கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – தமிழக அரசு

by Pramila
0 comment

மிக்ஜம்  புயல் காரணமாக  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  சென்னையில் சில பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பிற்கு ஆளானது.  இதை தொடர்ந்து மீட்பு பணிகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வந்தது. 

தற்பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மெல்ல மெல்ல அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வருகின்றனர்.  வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் இல்லாமல் ஒரு வார காலங்கள் மக்கள் மிகவும் வேதனைக்கு ஆளாகினர்.  தற்பொழுது வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை சீர்  செய்து மின்சாரம் கொடுக்கப்பட்டது.  வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு  பல தரப்பிலிருந்தும் உதவிக்கரம்  நீட்டி வருகின்றனர். 

மீக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட  கனமழை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்பொழுது கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்கள் தற்பொழுது இயல்ப வாழ்க்கைக்கு திரும்பி  வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் பாதிப்பானது ஏற்பட்டது.   இதைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகள் சீரமைப்பிற்காக 1 கோடியை ஒதுக்கியது. 

இந்நிலையில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு வார காலங்களாக விடுமுறையில் இருந்தது. இந்நிலையில் நாளை 11 – ம்  தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவலை வெளியிட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.