Home » Blog » தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி திடீர் மரணம்….!

தபால் வாக்கு செலுத்திய 94 வயது மூதாட்டி திடீர் மரணம்….!

by Pramila
0 comment

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாற்றுத்திறனாளிகள் வயதும் முதிர்ந்தவர்கள் வீட்டிலிருந்தபடியே அவர்களின் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதி தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இரண்டு நாட்களாக தபால் வாக்குப்பதிவு வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து அவினாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தபால் வாக்குப்பதிவு சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையில் அவினாசி பகுதியில் கங்கவார் வீதியில் வசித்து வந்த வடிவில் இவரது மனைவி தாயம்மாள் வயது 94  இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தபால் வாக்குப்பதிவு மூலம் அவரது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவை செலுத்தியுள்ளார். இந்நிலையில் 94 வயதான இந்த மூதாட்டி திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று உயிரிழந்து உள்ளார். வாழ்நாளின் இறுதி  கட்டத்தில் கூட அந்த மூதாட்டி அவரின் ஜனநாயக கடமையை செலுத்தி உள்ளது அனைவரையும்  நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.