Home » Blog » அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5  கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய  ஆயி பூரணம் அம்மாள்

அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5  கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய  ஆயி பூரணம் அம்மாள்

by Pramila
0 comment

ஆயி பூரணம் அம்மாள் மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் . இவருடைய வயது 52.   இவருடைய மகள் ஜனனி வங்கி ஊழியராக பணியாற்றினார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.  மகளின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் உடைந்த பூரணம் அம்மாள் மகள் ஜனனியின் விருப்பப்படி  கொடிக்குளம் அரசு பள்ளிக்கு  ஒன்றை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.  அவர்  தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ. 7  கோடி என கூறப்படுகிறது. 

ஆயி பூரணம் அம்மாள் அரசு பள்ளிக்காக செய்த சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு  விருது கடந்த 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்  ஆளுநர் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆயி பூரணம் அம்மாளுக்கு விருதை வழங்கினார். 

இதை தொடர்ந்து தற்பொழுது ஆகி பூரணம் அம்மாள்  கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் 91  செண்ட்  நிலத்தை தானமாக  வழங்கி உள்ளார்.  இந்த தகவலை  பள்ளி கல்வித்துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இவர் வழங்கிய 91 சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ. 3.5 கோடி என தெரிவிக்கப்பட்டது. 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.