குரங்கு காய்ச்சல் தொற்றானது கர்நாடகாவில் உள்ள சில மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு காய்ச்சல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் தொற்றுக்கான பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்றைய தினம் 154 பேருக்கு பரிசோதனை செய்ததில் மூன்று பேருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குரங்கு காய்ச்சல் தொற்றினால் 38 பேர் முன்னதாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் மூன்று பேருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சல் தொற்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் தற்பொழுது 25 பேர் குரங்கு காய்ச்சல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த குரங்கு காய்ச்சல் தொற்றுக்கு 18 வயது இளம்பெண் உட்பட இருவர் உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகா அரசு குரங்கு காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கேரள மாநிலம் கர்நாடகா எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிர படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.