Home » Blog » பத்தாம் வகுப்பு பொது தேர்வு – மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு – மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்

by Pramila
0 comment

பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை மார்ச் 26ஆம் தேதி தொடங்கும் நிலையில்  மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இதை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 9. 38  லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். 

நடப்பு ஆண்டிற்கான பிளஸ் 2  பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் கடந்த 22ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி பிளஸ் 1 பொது தேர்வு ஆனது தொடங்கி மார்ச் 25 இன்றுடன் நிறைவு பெற்றது.  இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஆனது நாளை மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ந்தேதி முடிவடைய உள்ளது.  

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் நாளே தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தமிழகத்தில் 12,616 பள்ளிகளில் 9 .10  லட்ச மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாகவும். தனி தேர்விற்காக 28,827  மாணவ மாணவிகள்  தேர்வு எழுத இருப்பதாகவும் மேலும் சிறை கைதிகள் 235   உள்ளிட்ட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 4,107  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதை தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.