ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத அளவில் தங்கம் விலையில் பெரும் அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சற்று சவரனுக்கு பத்து ரூபாய் குறைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து உள்ளது.
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 6, 250 க்குவிற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 640 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் ஐம்பதாயிரம் தொடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே தங்கம் விலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.