தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் சில முக்கிய தகவல்களை கூறினார். சிங்கப்பூரில் கடந்த ஒரு வார காலமாக புதிய வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அந்த வகையில் கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் தற்போது 230 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதுவரை 1104 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதாரத் துறை சார்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதில் கொரோனாவின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் மிதமான பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று வரை சிங்கப்பூரில் 3000 திற்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் தொற்று இருப்பவர்களுக்கு சளி மற்றும் இருமலோடு சரியாகிவிடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சளி இருமல் இருப்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.