தமிழ்நாட்டில் ஓரிலக்க அளவில் இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புதுவகை கொரோனா வைரஸ் ஜே.என். 1 என்கின்ற வைரஸ் தொற்று தற்பொழுது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறை சார்பில் இந்த வைரஸ் பற்றி பெரும் அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணியப்படும் பொழுது கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என்றும் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று நடைபெற்ற உலகை எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இதைப் பற்றி கூறியுள்ளார்.