தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் பல நோய்த் தொற்றுகளும் பரவி வருகிறது. பல வகையான வைரஸ் காய்ச்சலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று 174 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் சென்னையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்பொழுது கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது பெய்து வரும் பருவமழை காரணத்தினால் மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சலினால் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சில வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில் மக்கள் வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் என்றும். தண்ணியை சூடு செய்து குடிப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.