Home » Blog » இலவச அரிசிக்கு பதில் பணம்..!

இலவச அரிசிக்கு பதில் பணம்..!

by Pramila
0 comment

பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரிசியின் இறக்குமதி குறைவாக இருப்பதால் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் சில நல்ல திட்டங்களை வரிசையாக அமல்படுத்தி வருகின்றது. அதன்படி இரண்டு லட்சம் மெட்ரிக் டன் அரிசி  மத்திய அரசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சில ஒப்பந்தங்களை கர்நாடக அரசு முன்வைத்துள்ளது.இதன் காரணமாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்த ராமையா “அன்ன பாக்யா திட்டம்” ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தற்போது வழங்கி வரும் இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒரு கிலோ அரிசிக்கு 34 ரூபாய் வீதம் 680 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.