Home » Blog » வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது –   வெளியான கட்டுப்பாடு விதிமுறைகள்…!

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது –   வெளியான கட்டுப்பாடு விதிமுறைகள்…!

by Pramila
0 comment

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலுமே பலரும் அவர்களது வாகனங்களில் அவர்கள்  வேலை செய்யும் துறைகளை குறிப்பிட்டு ஸ்டிக்கர்களை ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  அதன்படி டாக்டர்,  போலீஸ்,  சினிமா துறை,  வழக்கறிஞர்,  பிரஸ் என பல்வேறு பதவிகளை சார்ந்த ஸ்டிக்கர்களை அவர்களது வாகனங்களில் ஒட்டி வந்தனர். 

போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி ஒரு சிலர் இதுபோன்ற போலியான ஸ்டிக்கர்களை ஒட்டி பல்வேறு குற்றங்களை செய்து வருவதாகவும் தகவல்  கிடைத்ததன் படி பல குற்ற செயல்களை செய்வதற்கு இதுபோன்று  பதவிகளை சார்ந்த ஸ்டிகர்களை குறிப்பிடுவதே காரணமாக கருதப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து போக்குவரத்து காவலர் கூடுதல் ஆணையர் ஆர். சுதாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் மீடியா,  பிரஸ் என ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனங்களில் செல்வதால் பல குற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும்.  ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார்.  

இதை தொடர்ந்து தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத  பதவி சார்ந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுவதாகவும் இதை தொடர்ந்து விதிமீறினால் மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவலை வெளியிட்டு இருந்தார். 

ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்ததற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வெளியானது.  மேலும் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து தங்கள் துறை சார்ந்த  ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்பவர்கள் அவர்களது வாகனத்தில் அவர்களது துறை சார்ந்த வேலையை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.  இதைத்தொடர்ந்து  துறைக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.