Home » Blog » கோடை விடுமுறை வருவதால் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் …!

கோடை விடுமுறை வருவதால் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் …!

by Pramila
0 comment

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 12ஆம் தேதியுடன் அனைத்து தேர்வுகளையும் முடித்து 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கப்படும் என கல்வித்துறை அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது . இதனால் பள்ளிகளுக்கு 12ஆம் தேதியுடன் அனைத்து தேர்வுகளையும் முடித்து 13ஆம் முதல் கோடை விடுமுறை தொடங்கப்படுகிறது . எனவே வரும் 13ஆம் தேதி முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது . கோடை விடுமுறையில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் அரசு நிறைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் ஆயிரம் பேருந்துகள் விதம் இயக்கப்படுகிறது . மேலும் வெளியூர் செல்வதற்கான போக்குவரத்து அதிகரித்துள்ளது . இது குறித்து அரசு வரை போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில் :

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஏசி பேருந்து பயணம் அதிகரித்துள்ளது . தமிழக முழுவதும் 364 ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன . மேலும் வருகின்ற நாட்களில் அதை பயணம் செய்வோம் என்பதை என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 67 ஸ்பேர் பேருந்துகள் உள்ளன அவற்றையும் இயக்க திட்டமிட்டுள்ளோம் . மேலும் கோடை விடுமுறை 45 நாட்களுக்கு மேலாக இருப்பதால் அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளது எனவே முன்பதிவு அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.