தமிழகஅரசு பெண்களுக்கான உரிமைதொகை மாதம் ரூபாய்-1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டம் வரும் அண்ணா பிறந்தநாளன செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது…
இதற்காக ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கிடு செய்துள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அந்த உரிமை தொகை எப்படி பெறுவது என்பதை பற்றியும் யாரெல்லாம் பெறமுடியும் விவரங்கள் வெளிடபட்டுள்ளது. இதை தொடர்ந்து தகுதியான பெண்களின் பட்டியலை எடுத்துக்கொண்டுள்ளது தமிழக அரசு.
விண்ணப்பிப்பது எப்படி ?
பெண்களுக்கான உரிமைத்தொகை மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் வரும் அண்ணா பிறந்த நாள் அன்று வழங்க இருக்கும் நிலையில் அதற்கு எப்படி விண்ணபிப்பது என்பதை பற்றிய நெறிமுறைகள் அரசு வெளிட்டுள்ளது.தற்போது விண்ணபிப்பதற்கான படிவத்தை வெளிட்டுள்ளது ,
அந்த விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்,திருமண நிலை ,மின் இணைப்பு எண் ,குடும்ப அட்டை ,ஆதார் எண் ,சொந்த வீட அல்லது வாடகை வீடா என்பதை பற்றிய விபரம் ….போன்ற 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது .அதுபோக 18வயதுக்கு மேல் உள்ளவர்களின் விவரத்தை பற்றியும்,நில உடைமை சொத்து விபரம் ,வாகனம் விவரங்கள்ளும்,இடம் பெற்றுள்ளது.