லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது . இதில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் சிலர் சிக்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது . இதைதொடர்ந்து தீயை அணைக்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
இந்த ரயில் விபத்து சுமார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது . இவர்கள் மதுரையில் சாமி தரிசனத்திர்க்காக வந்துள்ளனர் . இன்று மீனாச்சி அம்மன் சாமி தரிசனம் செய்து விட்டு நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்துள்ளனர் . இன்று அதிகாலை இவர்களது ரயில் மதுரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அப்போது அங்கு இருந்த சில சக பயனிகள் சிலிண்டர் மூலமாக சமைக்க முற்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
இதனால் பதறி அடித்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் , தீயை அணைக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் விபத்தில் சிக்கி சுமார் 9 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது . அங்கு வந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர் , ரயிலில் சிலிண்டர் கொண்டுவரப்பட்டது எப்படி என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரதீப் கூறுகையில் :
இதுவரையில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் 5 பேர் ஆண்கள் என்றும் 3 பேர் பெண்கள் என்றும் தெரிவித்தார் . இன்னொருவரின் உடல் இன்னும் கண்டறியவில்லை என்று அவர் கூறினார் .