Home » Blog » தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம்

by Pramila
0 comment

தமிழகத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் மிதமான  மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  வானிலை வறண்டு காணப்படும் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் காலை வேளையில்  பனிமூட்டத்தின் அளவு சற்று அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. 

மேலும் தென் மாவட்டங்களை பொருத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இரவு நேரங்களில்  உறைபனி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில்  பனிமூட்டத்தின் அளவு சற்று அதிகரித்து காணப்படும் என்றான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.