Home » Blog » அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய துப்புரவு பணியாளர் சஸ்பெண்ட்..!

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய துப்புரவு பணியாளர் சஸ்பெண்ட்..!

by Pramila
0 comment

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில்  சிகிச்சையில் இருந்த நோயாளிக்கு ட்ரிப்ஸ் செலுத்திய தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த செவிலியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு தூய்மை பணியாளர் ட்ரிப்ஸ் செலுத்திய வீடியோ தற்பொழுது இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. 

இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் சுகாதார இணை இயக்குனர் திலகா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.  அன்று அந்த  வார்டில்  பணியில் இருந்த செவிலியர் சித்ராவை  பணியிடை மாற்றம் செய்துள்ளார். செவிலியர் சித்ராவை நல்லிணக்கத்துக்கும் தலைமைச் செவிலியர் ஆக பணியில் இருந்த வசுமதி செவிலியரை வலங்கைமானுக்கும் பணியிடை மாற்றம் செய்ய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இவர்களைத் தொடர்ந்து நோயாளிக்கு ட்ரிக்ஸ் செலுத்திய தூய்மை பணியாளர் கஸ்தூரியை 15 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய அளவில் செவிலியர் மற்றும்  மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.