நடிகை அஞ்சலி 2007 இல் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை அஞ்சலி நடிப்பதிலிருந்து இடைவெளி கொடுத்துள்ளார். உடல் எடை குறைப்பதற்காக சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்ட அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார்.
நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி காதலித்து வருவதாக செய்திகள் பரவியது அதை தொடர்ந்து இருவரும் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டதாகவும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதை தொடர்ந்து உடல் எடை காரணமாக சினிமாவிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட நடிகை அஞ்சலி மீண்டும் உடல் எடையை குறைத்து தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். ஏழு கடல் ஏழுமலை மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகை அஞ்சலி தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ள போவதாக பரவி வரும் செய்தியை பற்றி நடிகை அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாக செய்தி பரவியது இதை தொடர்ந்து திருமணம் ஆகிவிட்டது என்றும் பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது தற்பொழுது தொழிலதிபருடன் திருமணம் ஆகப்போவதாகவும் அமெரிக்காவில் செட்டிலாக போவதாகவும் பல செய்திகள் பரவி வருகிறது. இது போன்ற செய்திகள் எல்லாம் அவர்களே எழுதி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனக்கே தெரியாமல் திருமணமானதை நினைத்து சிரித்துள்ளேன். உண்மை இல்லாத செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று நடிகை அஞ்சலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.