நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ஆகியோரின் உருவம் மாறாமல் ஏஐ தொழில்நுட்பதில் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின் குரல்களில் தேசிய கீதம் பாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த காணொலி அனைவரையும் ஆச்சிரியம் படும் வகையில் உள்ளது . அதுமட்டுமின்றி சுதந்திர தினத்தன்று வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது இந்த காணொலி என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துவருகிறது .