அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் அனைவரையும் அதிர்ச்சி அடையும் விஷயமாக கொடூரம் அரங்கேறி உள்ளது. மரிகா தாமஸ் இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. மரிகா தாமஸ் இவருடைய பெண் குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக குழந்தையின் துணி கருகி வாசனை வெளியேறியது அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவலை தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். மைக்ரோ ஓவனில் இருந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை உடல் படுகாயம் அடைந்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதனையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் குழந்தையின் தாய் மரிகா தாமஸ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையின் தாய் மரியா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அவர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.